நடிகை குஷ்பூவின் புகைப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிர் அமைப்பினர்

சேலம்.
S.K.சுரேஷ் பாபு.

திரைப்பட நடிகை குஷ்பூ உருவப்படங்களை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது திமுக மகளிர் அமைப்பினரால் பரபரப்பு.

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மஞ்சுளா தலைமையில் திரளானோர் கலந்து கொண்டு குஷ்புவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 
மேலும் குஷ்புவின் புகைப்படத்தை கிழித்து, செருப்பு மற்றும் துடப்பத்தால் அடித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி குஷ்புவின் உருவ பொம்மையை மீட்டு சென்றனர். இதனிடையே குஷ்புவின் புகைப்படங்களை திமுகவினர் தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Post a Comment

0 Comments